tamilnadu

வேளாண்மை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் பாரபட்சம் பிளஸ்2 வேளாண் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 13 – தமிழகத்தில் பிளஸ் 2 வேளாண்மைச் செயல்பாடுகள் படிப்பு படித்த மாணவர் களுக்கு வேளாண்மை சார்ந்த பி.எஸ்சி., பி.டெக்., படிப்புகளில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு. மூர்த்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் சனியன்று விடுத் துள்ள செய்தியறிக்கையில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பி.எஸ்சி (வேளாண்மை), பி.எஸ்சி  (தோட்டக்கலை) போன்ற பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது. இப்படிப்பு களில் சேர்வதற்கு மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற் பாடப்பிரிவு உள்ளது. பெரும்பாலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடப்பிரிவு உள்ளது. இப்பிரிவில் பயின்ற  மாணவர்களில் 1630 பேர் இக்கல்வியாண்டில்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும்  பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள் ளனர். வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின்  கீழ் செயல்படும் 14 உறுப்புக் கல்லூரி களிலும், 27 தனியார் சுயநிதி இணைப்புக் கல்லூரிகளிலும் வேளாண்மை சார்ந்த 6  பி.எஸ்சி படிப்புகளும், 4 பி.டெக் படிப்பு களும் நடத்தப்படுகின்றன. இப்படிப்பு களுக்கு பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி களில் 1225 மாணவர்களும், தனியார் சுயநிதி இணைப்புக் கல்லூரிகளில் 3995 மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் பிளஸ்2 வேளாண்மைச் செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவு மாணவர்களுக்கு பல்கலைக் கழக உறுப்புக்  கல்லூரிகளில் பி.எஸ்சி வேளாண் படிப்பில்  31 இடங்கள்,  பி.எஸ்சி தோட்டக்கலை படிப் பில் 8 இடங்கள், பி.எஸ்சி வனவியல் படிப்பில் 2 இடங்கள், பி.டெக் வேளாண் பொறியியல் படிப்பில் 3 இடங்கள் என நான்கு படிப்புகளுக்கு மொத்தம் 44 இடங்கள்  மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. மேலும் இவ்விடங்களை நிரப்பு வதில் இடஒதுக்கீட்டு விதிமுறை பின் பற்றப்படமாட்டாது என்றும், தனியார் இணைப்புக் கல்லூரிகளில் பல்கலைக்கழக ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் 65 சதவிகித இடங்களுக்கும், இணைப்புக் கல்லூரி களின் நிர்வாகங்களே நிரப்பும் 35 சத விகித இடங்களுக்கும் வேளாண்மைத் தொழிற்பாடப்பிரிவு மாணவர்கள் அனு மதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது.  வேளாண்மைப் பல்கலைக் கழகம் பின் பற்றும் மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிய ளித்துள்ள இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதாகவும், வேளாண்மை தொழிற் பாடப்பிரிவு மாணவர்களுக்கு வாய்ப்பு களை மறுப்பதாகவும் உள்ளன. வேளாண் தொழிற்பாடப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு நடப்புக் கல்வி யாண்டு வரை 1 சதவீத இடங்களைக் கூட ஒதுக்கவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற் பாடப்பிரிவில் மாணவர்கள்  எண்ணிக்கை குறைந்து தொழிற்பாடப் பிரிவுகள் மூடப்படுவது தான் நடந்து வரு கிறது. மருத்துவப் படிப்பைப் போன்ற அவல நிலை வேளாண்மைப் பட்டப்படிப்புச் சேர்க்கையிலும் தொடர வழிவகுப்பது வேத னையளிக்கிறது. குலக்கல்வித் திட்டத்தை  விட தொழிற்கல்வித்திட்டம் மோசமான தாக இருக்கக் கூடாது.  எனவே, வேளாண்மை தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு முன்னுரிமையும் சமவாய்ப்பும் கிடைக்கும் வகையில் வேளாண்மைப் பல்கலைக் கழகப் படிப்பு களில் சேர்க்கை விதிமுறைகளைத் திருத்தம்  செய்தபிறகே இக்கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை  நடத்தவேண்டும் என கல்வி  மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கி ணைப்பாளர் சு.மூர்த்தி கூறியுள்ளார்.