திருப்பூர், ஜூலை 22- பால் கொள்முதலை குறைப்பதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளதற்கு தமிழ் நாடு விவசாய சங்கம் மற்றம் பால் உற்பத்தி யாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பரமசிவம், கவுதம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள் ளதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக் குளி, சேடர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விவசாயிகள் கறவை மாடு உற்பத்தி செய்யும் பாலினை ஆவின் நிர்வாகத் திற்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்ற பாலினை 20 சதவிகிதமாக குறைப்பதாக அறி வித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன்தொடர்ச்சியாக ஊத்துக்குளி, சேடர்பாளையம் உள்ள ஆவின் நிர்வாகம் புதனன்று விவசாயிகளிடம் பெற்ற பாலை திருப்பி அனுப்பியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, கொரோனா காலத்தில் விவ சாயிகள் கடுமையாக சிரமப்பட்டு வரு கின்றனர். இத்தகைய நிலையில் கூட்டுறவு சங்கத்தின் பதியப்பட்ட உறுப்பினர்களின் பாலை, வாங்க மறுத்து திருப்பி அனுப்பு வது கூட்டமைப்பை சீர்குலைப்பது ஆகும்.
ஆகவே, 20 சதவிகிதம் பால் குறைப்பதன் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கொள் முதல் செய்யும் பாலுக்கு ஆவின் நிர்வாகம் சங்கங்களுடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். ஆவின் மூலமாக மானிய விலை கலப்பு தீவனம் தொடர்ந்து வழங்க வேண்டும். மாறாக, பால் கொள்முதல் குறைப்பு தொடருமானால் அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.