தாராபுரம், மே 21 -தாராபுரத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது.மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவுநாளை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் தாராபுரம் சர்ச்ரோடு கார்னரிலிருந்து துவங்கியது. பெரியகடைவீதி வழியாக பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகே முடிவடைந்தது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜிவ்காந்தி உருவ படத்திற்கு முன்பு தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியேற்றனர். நிகழ்ச்சியில் நகர தலைவர் செந்தில், வட்டார தலைவர் முத்துகுமார், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரணிஷ் பாலு, மூலனூர் வட்டார தலைவர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் ஜோதிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.