tamilnadu

img

சாலையில் கழிவுநீரை வெளியேற்றுபவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாநகராட்சி 18ஆவது வார்டு சேடர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் முறையாக வடிந்து செல்ல ஏற்பாடு செய்யப்படாத நிலையில், அங்குள்ள சாலையில் வெளியேறி கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அப்பகுதியில் நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி, மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீரை சாலையில் வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

;