tamilnadu

img

நலவாரியத்தில் பதிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கிடுக சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஜூன் 10 – நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்துத் தொழிலாளர் களுக்கும் கொரோனா நிவாரண நிதி முழுமையாக வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டப் பொருளாளர் டி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். அத்துடன் திர ளான தொழிலாளர்களும் பங்கேற்றனர். இதில் நலவாரி யத்தில் பதிவு செய்தும் நிவாரணம் பெறாதவர்களுக்கு உட னடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. மொத்தம் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கப்பட்டது.

;