உடுமலை, அக். 3- உடுமலை சந்தை பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென சிஐடியு தினசரி மார்க்கெட் சிறு வியாபாரி கள் மற்றும் தொழிலாளர் சங்கம் வலியுறுத் தியுள்ளது. உடுமலை பொது தொழிலாளர் சங் கத்தின் சார்பில் மார்க்கெட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வியாபாரி கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தினமும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வந்து செல்லும் தினசரி மார்க்கெட் பகுதி யில் மின்விளக்கு மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை. சந்தைக்கு வரும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் வகையில் சுகாதார சீர்கேடு நிலவுவதை சரிசெய்ய வேண்டும். இங்கு உள்ள கடைகளுக்கு தண்ணீர் மற் றும் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண் டும். இரவு நேரங்களில் சமூக விரோதி களின் புகழிடமாக உள்ளதைத் தடுக்கும் வகையில், ரோந்து பணியை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றபட்டது. இந்த கூட்டத்தில் புதிய தலைவராக எஸ்.சாதிக்அலி, செயலாளராக என்.சக்தி வேல், பொருளராக வி.கோபிநாத், துணை தலைவராக என்.கனகராஜ், துணை செய லாளராக ஆர்.சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சிஐடியு உடுமலை பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வெ.ரங்கநாதன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொருளா ளர் ஜோசப் மற்றும் பாபு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.