tamilnadu

திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர், ஜன. 8- திருப்பூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுவதால் வேலை நாடு பவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு  என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ள்ளதாவது:- திருப்பூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  ஜன.10ஆம் தேதி யன்று காலை10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம்,  அறை எண் 439,  4வது தளம்,பல்லடம் சாலையில் உள்ள மாவட்டவேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,  திருப்பூர் -641604  என்ற  முகவரி யில்  நடைபெறுகின்றது. இம்முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்க ளுக்கு தேவையான காலியிடங்களை நிரப் பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெ றலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறை கள் கண்டறியப்பட்டால்,  அதனை சரி செய்து கொள்ளலாம்.மேலும், புதுப்பித் துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.  தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற  விண்ணப்பிக்கலாம். தனியார் துறைக ளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது, என தெரிவித்துள்ளார்.

;