tamilnadu

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர், ஏப். 13 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சாலை குளோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனியன்று நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கடந்த மார்ச் 30, ஏப்ரல் 7 ஆகிய இரு நாட்கள் தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது கட்டமாக இந்தப் பயிற்சி நடைபெற்றது. இம்மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மையங்களில் மொத்தம் 12ஆயிரத்து 208 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

;