அவிநாசி, ஆக. 24- அவிநாசி அருகே ஆதார் அட்டைகள், காசோலைகள் உள்ளிட்டவைகள் கொண்ட தபால்கள் குப்பையில் வீசப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் குப்பையில் மூட்டை ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் எடுத்து பிரித்து பார்த்தபோது, தபால் ஊழியர் மூலம் வினியோகிக்கப்பட வேண்டிய வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், வங்கி காசோலைகள், ஆதார் அட்டைகள், உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டைகள், பல்கலைக் கழக சான்றுகள், காப்பீட்டுத் துறை கடிதங்கள் என 100க்கும் மேற்பட்ட தபால்கள் இருப்பது தெரியவந்தது. அவை கடந்தாண்டு நவம்பர், டிசம்பர், இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங் களில் அவிநாசி பகுதிக்குட்பட்ட கருணைப் பாளையம், வேலாயுதம்பாளையம், கச்சேரி வீதி உள்ளிட்ட இடங்களில் வசித்து வருவோருக்கு விநியோகிக்கப்பட வேண்டியவையாக இருந்தன. அவற்றில் பதிவு தபாலில் அனுப்பப்பட்ட கடிதங்களும் இருந்தன. வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியிருக் கிறது. அவற்றை சரியான முறையில் வீடு தேடிச் சென்று விநியோகிக்காமல், வீதியில் வீசப்பட்டுள்ளது குறித்து தபால் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தள்ளனர்.