உடுமலை, ஜுன் 15- ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளால் வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட் டில்களை சனியன்று பள்ளி மாணவ-மாணவியர்கள் அப்புறப்படுத்தினர். ஆனைமலைபுலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டத்தில் உள்ள வனச் சோதனைச்சாவடி முதல் சின்னார் வனச்சோத னைச்சாவடி வரை உடு மலை ஆர்.ஜி.எம். மேல்நிலைப்பள்ளி மற்றும் பெதப்பம்பட்டி பள்ளி மாணவ -மாணவியர்கள் தூய்மை பணியில் ஈடு பட்டனர். இதில் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வீசி எறிந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில் களை மாணவ-மாணவியர்கள் அப்புறப் படுத்தினர். மேலும் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கே.கணேஷ் ராம் ஆனைமலைபுலிகள் காப்பகம் குறித்தும், வனஉயிரினங்களின் முக்கியத்துவம் பற்றி பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில்அமராவதி வனச்சரகர் சி.தன பாலன், உடுமலை வனச்சரகர் ஆர்.முரு கேசன் மற்றும் வனப்பணியாளர்கள், ஆரண்யா அறக்கட்டளை தலைவர் மற்றும் கௌரவ வனஉயிரின காப்பாளரான நந்தினி இரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.