பல்லடம்,அக்டோபர்.17- பல்லடத்தில் மாணவிகளின் பாதுகாப்பிற்காக பிங்க் பேட்ரோல் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் உட்கோட்டம் உட்பட்ட பகுதிகளில் 9 மேற்பட்ட கல்லூரிகள் 30 மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குப் பெண்கள் சாலையில் செல்லும் போது சிலர் கேலி, கிண்டல் செய்வதாகவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் வந்துள்ளது.
இதனையடுத்து பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பிங்க் பேட்ரோல் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதில் காலை 8 முதல் 9 மணி வரை அதேபோல் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மகளிர் காவல்துறை இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.