அவினாசி அருகே ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வியாழனன்று ஊராட்சி மன்ற தலைவரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆற்று குடிநீர், ஆழ்துளாய் தண்ணீர், தெரு விளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றி தருமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் தங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். இதில் மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் செல்வி உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.