திருப்பூர் மாவட்டம் முழுவதும், தென்னை விவசாயம் என்பது அதிகரித்து உள்ள சூழலில், தேங்காய் எண்ணெய் உற் பத்தி மையமாக காங்கேயம் தாலுகா வளர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொடங்கி 5 மாதத்திற்கு பருவ காலம் என்பதால் தேங்காய் உற்பத்தி அதிக மாக இருக்கும். இதைபயன்படுத்தி, தேங்காய் கலங்கள் மூலமாக தேங்காய் கொப்ப ரையை பதப்படுத்தி தேங்காய் எண்ணெய் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் காங்கேயம் பகுதியில் மட்டும் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் உற்பத்தி செய்யப்படு கிறது. குறிப்பாக தேங்காய் பருப்புகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, தேய் காய் எண்ணெய்யாக மாற்றி ஆண்டு முழுவ தும் விற்பனை செய்வதன் மூலம் பெரு நிறு வனங்கள் பெரும் லாபத்தை ஈட்டுகிறார்கள். இந்நிலையில், சிறு குறு வியாபாரிகள் மீத முள்ள தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்யும் போது விலை ஏற்றம் இறக்கம் ஏற்படுவதால் நெருக்கடி ஏற்படுகிறது. இத னால் ஒரு கிலோ தேங்காய் பருப்பு 82 ரூபாய்க்கு கொள்முதல் செய்த ஓரிரு நாட்களில் 80 ரூபாய்க்கு விலை குறைகிறது. இயற்கையில் தேங்காய் பருப்புகள் ஒரு வார காலத்திற்கு இருப்பு வைத்தால் தேங்காய் பருப்புகளின் எடை குறைந்து விடும். இதனால் மேலும் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரி களுக்கும் பாதிப்பை உருவாக்கி வருகிறது. மேலும் தேங்காய் விவசாயிகள் மற்றும் தேங் காய் வியாபாரிகளுடன் கலந்து பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
குறிப்பாக, கொப்பரையை மாநில அரசு கொள்முதல் செய்து கொப்பரைக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கொப்பரைக்கு ரூ.140 விலை நிர்ணயம்கொள்ள முதல் செய்ய வேண்டும். உரித்த தேங்காய் கிலோ ரூ.50 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண் டும். தென்னை மரத்திற்க்கான நம் பயிர் காப் பீடு தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் வேகப்படுத்தி, அனைத்து தென்னை மரங்க ளையும் கேரசுரஷ்கா திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும். தென்னை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு காப்பீடு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் வழங்குவதை வேகப்படுத்தி அனைத்து தொழி லாளர்களையும் இணைக்க வேண்டும். தேங் காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். பள்ளிகளில் வழங் கும் சத்துணவிலும், மாணவர் விடுதிகளில் வழங்கும் உணவுகளிலும் தேங்காய் எண் ணெயை பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய அலுவ லகத்தை மீண்டும் கோயமுத்தூரில் அமைக்க வேண்டும். மேலும், கேரள இடது முன்னனி அரசாங் கத்தை போல் தமிழ்நாடு அரசே நேரடியாக தேங்காய் பருப்புகளை நியாமான விலையில் கொள்முதல் செய்து, நியாய விலை கடையின் மூலம் விநியோகம் செய்ய வேண்டும் இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுகையில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறி தளவேனும் பாதுகாக்கப்படும். இல்லை யெனில் வெங்காயம் உரித்தால் மட்டுமல்ல...தேங்காய் உரித்தாலும் தென்னை விவசாயி களின் கண்களில் கண்ணீர்தான் வரும்...