tamilnadu

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

அவிநாசி, பிப். 5- அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கிணற் றுக்குள் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்கப் பட்டது. அவிநாசி அருகே ராயம்பாளையம் தனியார் தோட்ட கிணற்றில் மயில் ஒன்று விழுந்து கிடப்பதாக அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலையிலான குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 80 அடி ஆழமுள்ள நீருள்ள கிணற்றில் விழுந்த ஆண் மயில் தத்தளித்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்கப்பட்ட மயில் வனப்பகுதியில் விடப்பட்டது.