அவிநாசி, மார்ச் 12- பெருமாநல்லூரில் ஒரிசா மாநில வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஒரிசா மாநிலம் சம்பல் பூர் பகுதியைச் சேர்ந்த ரூபிஸ்வேர்மிகிர் மகன் ஜிப்ட்மிகிர் (24). இவர் தனது குடும்பத்துடன் அவிநாசி அருகே பெருமா நல்லூர் வீதிக்காடு பகுதி யில் உள்ள குடியிருப்பு பகு தியில் தங்கி, பனியன் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திரு மணம் செய்வதற்காக இவ ருக்கு நிச்சயிக்கப்பட்டி ருந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த தால் அவர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனை யடுத்து வீட்டின் சமை யலறையில் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர் பாக பெருமாநல்லூர் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.