திருப்பூர் , செப். 14 – உயர் மின்கோபுரம் அமைப்ப தற்குக் காரணமான 1885ஆம் ஆண்டு தந்தி சட்ட நகலை எரிக் கும் போராட்டத்தை வரும் செப். 18ஆம்தேதி பெருந்திரளான விவ சாயிகளைத் திரட்டி வலுவாக நடத்துவது என்று உயர் மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட் டியக்கம் முடிவு செய்துள்ளது. உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டமைப் பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகி கள் கூட்டம் சனியன்று காலை 11 மணி அளவில் பல்லடத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வெள்ளி கிழமை விவசாய நிலத்தில் அத்து மீறி நுழைந்த பவர்கிரிட், வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகளி டம் உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய உரிய உத்தரவு உள்ளதா என்று விசாரித்து, விவ சாயிகளுக்கு ஆதரவாக பேசியதற் காக கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் ஈசன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், மாநில செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, விவசாயி தங்கமுத்து ஆகியோர்மீது பல்வேறு பிரிவுக ளில்வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நள்ளிரவு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இதை வன்மையாக கண்டிக்கி றோம். அதேபோல் வெள்ளியன்று தனது நிலத்தில் அளவீடு செய் வதை எதிர்த்த காரணத்திற்காக தாராபுரம் தாலுகா வட சின்னேரி பாளையம், மேற்கு சடையபாளை யத்தை சேர்ந்த 20 பெண்கள் உட்பட 67 விவசாயிகளை குண்டு கட்டாக கைது செய்து மாலையில் விடுவித்தனர். சனிக்கிழமையும் மேற்கு சடை யபாளையம் விவசாயிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக் கப்பட்டுள்ளனர். இந்நடவடிக் கையை கூட்டியக்கம் வன்மை யாக கண்டித்துள்ளது. அத்துடன், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் விவ சாயிகளுக்கு ஜனநாயக அமைப் பில் உரிய தகவல் கொடுக்கவோ, சட்ட வழிமுறைகளை பயன் படுத்தவோ உரிய அவகாசம் கொடுக்காமல் காவல்துறையை பயன்படுத்தி உயர் மின் கோபுர திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப் பதையும் கூட்டியக்கம் வன்மை யாக கண்டித்து உள்ளது. ஆகவே பொய்வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டுள்ள தலைவர் களை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்திடவும், விவசாயி கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் வாங்கிட வேண்டும். மேற்படி விவசாயிகளின் துன் பத்திற்கு காரணமான 1885 தந்தி சட்ட நகலெறிப்பு போராட்டத்தை வருகிற செப்.18ஆம் தேதி திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு பாதிக்கப்பட்ட விவ சாயிகளை சக்தியாகத் திரட்டி நடத்துவது, விவசாயிகள் இயக்க தலைவர்கள் மீதான காவல் துறை யின் கைது நடவடிக்கையை கண் டித்து வருகிற 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு குண்டத்தில் நாடாளு மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து விவ சாய சங்க தலைவர்கள் பங்கேற் கும் கண்டன கூட்டத்தை நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலை மையில் உழவர் உழைப்பாளர் கட்சி இளைஞர் அணி தலைவர் சோமசுந்தரம், ஒருங்கிணைப் பாளர் வை.பழனிசாமி, தவிச மாவட்ட செயலாளர் ஆர்.குமார், குங்குமபாளையம் முத்துசாமி, வேங்கிபாளையம் துரை உள் ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.