தாராபுரம், நவ. 12- விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை பதிப் பதை கைவிட வலியுறுத்தி நவம்பர் 18ல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபவடுதென உயர்மின் கோபுர எதிர்ப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. விளை நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபு ரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டி யக்கத்தின் ஆலோசனை கூட்டம் தாராபுரம், பெரியார் திடல் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் தலைமை வகித்தார். இதில், உயர்மின் கோபுர விவசாயி களை அச்சுறுத்தி, அடக்குமுறை செய்து நிலத்தை பறிப் பதை கைவிட வேண்டும். மேலும், விவசாயிகள் சங்கத் தின் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணவேண்டும் என வலியு றுத்தி நவ. 18 ஆம் தேதியன்று தாராபுரம் அண்ணாசிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆறுமுகம், சிவக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தாராபுரம் தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட்ராமன், சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் செல்வராஜ், செல்லக்குமார், குங்குமபாளையம் முத்துசாமி, மாம்பாடி கந்தசாமி, பால்ராஜ், தனபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.