tamilnadu

img

நான்கு மாதகால சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிடுக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

உடுமலை, மே 21- உடுமலை ஜெயின் இரிகேசன் சிஸ்டம் நிறுவனம் நான்கு மாதகாலமாக தொழி லாளர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிடக் கோரி சிஐடியு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை ஜெயின் இரிகேசன் சிஸ்டம் லிமி டெட் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நான்கு மாதகால மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள பாக்கியை வழங்கிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண் டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலைப்பேட்டை சிஐடியு தாலுகா செயலாளர் எஸ்.ஜெக தீசன் தலைமை் வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் எம்.சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் டி.குமார், சிபிஎம் ஒன்றிய செய லாளர் கி.கனகராஜ், சிஐடியு கிளைத் தலை வர் கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலாளர் பாலமுருகன் மற்றும் தொழிலாளர்கள் உட் பட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.