தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளியன்று (நவ.6) திருப்பூர் மாநகருக்கு வருகை தந் தார். அவரது வருகைக்காக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாக மும், காவல் துறையும் நடந்து கொண்ட விதம் திருப்பூர் மக்களை மனம் குமுறச் செய்துள்ளது. “மக்களுக்காகத்தான் அரசு!” என்று சொல்லப்பட்டாலும், அதி கார வர்க்கம் மக்களை எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்பதை மன சாட்சியும், வெட்கமும் இல்லாமல் அவர்கள் ஒப்புக் கொள்வதாகத்தான் இந்த செயல்பாடு இருந்தது. குறிப்பாக திருப்பூர் மாநகரில் சீர்மிகு நகரத் திட்டம் மற்றும் நான் காவது குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் என பல பணி கள் பரவலாக நடைபெற்று வரு கின்றன. மாநகர வளர்ச்சிக்காக இது போன்ற திட்டப் பணிகள் செய்ய வேண்டியது அவசியம் என்றா லும், இது பற்றி முறையான முன் னறிவிப்போ, தகவல் பலகையோ எங்கும் வைக்கப்படுவதில்லை,
போக்குவரத்து பாதிக்கப்படும் பகுதிகளில், மாற்றுப்பாதை ஏற் பாடும் செய்வதில்லை. சில பகுதி களில் நாலா திசையிலும் வேலை களைத் தொடங்கி மக்கள் எங்குமே செல்ல முடியாத இக்கட்டான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க நகரின் பல்வேறு சாலைகளும் குண்டும், குழியுமாக இருப்பதோடு, மழை பெய்ததால் சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கே லாயக்கில்லா மல் கிடக்கின்றன. நகரெங்கும் குப் பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசிக் கிடக்கிறது. குடிநீர் பிரச்ச னையும் படுமோசம். வாரம் ஒரு முறை, பத்து பதினைந்து நாட்க ளுக்கு ஒரு முறை சில பகுதிகளில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் என்ற நிலையில் இருக் கிறது. சாக்கடை கால்வாய்களும் தூர்வாருவது, தொடர்ந்து சுத்தம் செய்வது நடப்பதில்லை. இப்படி இல்லை, இல்லை, இல்லை எனச் சொல்லும் நிலை யில்தான் நகரின் நிலையே இருக்கி றது. இதற்கிடையில்தான் திருப்பூர் மக்கள் பரபரப்பாக ஓடியாடி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கின் றனர்.
கொரோனா தொற்று பரவ லைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை யைப் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம் எனும் அளவுக்கு மோச மான நிலைதான் உள்ளது. இத்தனை பிரச்சனைகள் இருந் தும் மாவட்ட, மாநகர மற்றும் காவல் நிர்வாகங்கள் குறைந்தபட்சமாவது தீர்வு காண, ஒழுங்குபடுத்த முயற்சி மேற்கொள்கிறார்களா என்பது மிகப்பெரும் கேள்வி. ஆனால் நகரில் வாழும் பல லட்சம் மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத அரசு இயந்திரம், சில மணி நேர நிகழ்ச்சிக் காக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி இங்கு வருகிறார் என்றவுடன் சாவி கொடுத்த பொம்மைகளைப் போல வேலை செய்தனர். உதகை, மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு வருகிறார் என்றவுடன் இந்த சாலை முழுவதும் அவர் வருவ தற்கு இரண்டு நாட்களுக்கு முன்பி ருந்தே தூய்மைப் படுத்திக் கொண்டி ருந்தனர்.
எங்கும் மழைநீரோ, கழிவு நீரோ தேங்காமல் உடனுக்குடன் அகற்றினர். குப்பைகளை லாரிக ளில் அள்ளிச் சென்றதோடு, தூய் மைப் பணியாளர்களை வழி நெடுக நிறுத்தி சின்னச்சின்ன குப்பைகூட அகற்றப்பட்டது. சாலையோரம் குவிந்த மணற்குவியலை ஆட்களை விட்டு அப்புறப்படுத்தினர். காற்ற டிப்பான் மூலம் தூசுகளை அகற்றி னர். நகரமே ஒய்யாரக் கொண்டை யில் ஈறும், பேணுமாக நாறிக் கிடக்க, அதில் சூட்டப்பட்ட தாழம்பூவைப் போல அழகாகக் காட்சியளித்தது முதல்வர் பயணிக்கும் அந்த ஒரு சாலை மட்டும்! மாநகராட்சி மட்டு மல்ல, மாவட்ட நிர்வாகத்தின் பல துறைகளும் பம்பரம் போல் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தன. எத்தனையோ இடர்பாடுக ளுக்கு இடையே ஒவ்வொரு நாளும் போராட்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உத வாத காவல்துறை நண்பன், முதல்வ ரின் நண்பனாக சைரன் ஒலி அலறிய வாகனங்களில் இங்குமங்குமாகப் பறந்து கொண்டிருந்தது.
முதல்வர் வரும் சாலை நெடுகிலும் காலை முதலே பரபரப்புக் காட்டிக் கொண் டிருந்தனர். நெருக்கடியான நகரில் சாலையோரம் வாகனங்களை நிறுத் துவது வாடிக்கையான விசயம், ஆனால் காலை முதலே வாகனங் களை நிறுத்தக் கூடாது என்று கெடு பிடி காட்டிக் கொண்டிருந்தனர். ரயில்வே மேம்பாலத்தில், தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பு பகுதியில் எந்தவொரு கட்சியினர், அமைப்பினர் கொடி கட்டக் கூடாது என்று விதி சொல்லும் காவல் துறை யினர், ஆளும் கட்சியினருக்கு மட் டும் எந்த விதிமுறையும் இல்லை என்பது போல கண்டு கொள்ள வில்லை. மேம்பாலம், சாலை மையத் தடுப்பு என பல பகுதிகளிலும் இரும்பு கம்பிகளை நட்டு பெரிய கொடிகளைப் பறக்கவிட்டிருந்த னர்.
ஏதேனும் ஒரு சந்திப்பில் ஆர்ப் பாட்டம், தெருமுனைக் கூட்டத் துக்கு அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கெடுபிடி செய்யும் காவல் துறை, முதல்வர் வரு கைக்காக குறைந்தபட்சம் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு மேடை அமைத்த ஆளும் கட்சியின ருக்கு கூடுதல் காவலர்களைப் பாது காப்புக்கு நிறுத்தி அழகு பார்த்தது. இப்படியாக ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும், சில மணி நேர முதல் வர் நிகழ்வுக்காக நடத்திய தடபுடல் ஏற்பாடுகள், எப்போதும் இந்த நக ரோடு பின்னிப் பிணைந்து உழைத் துக் கொண்டிருக்கும் மக்கள் பிரச்ச னைகளில் எள்ளளவும் அக்கறை காட்டாமல் இருப்பதை மேலும் அப் பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டனர். இது திருப்பூர் வாசிகளிடம் கடும் அதிருப்தியை யும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியை எம்ஜிஆர், ஜெயலலிதா அளவுக்கு நட்சத்திர அந்தஸ்து மிக்க வராக காட்டுவதற்காக அதிகார வர்க்கமே வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டது. ஆனால் திருப்பூர்வா சிகளும் மனிதர்கள்தான் என்பதை உணர வேண்டும். மக்களின் அன் றாட அவசியப் பணிகள் எப்போதும் இயல்பாக தொடர்ந்து நடைபெறு வதை உறுதிப்படுத்த வேண்டும். வே.தூயவன்