tamilnadu

யுனிவர்சல் பள்ளியில் இன்று புதிய கட்டிடம் திறப்பு விழா

திருப்பூர், ஜன. 26 - திருப்பூர் யுனிவர்சல் பள்ளிக்குழுமத்தின் சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மின்னணு தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் திங்களன்று திறந்து வைக்கப்படுகிறது. திங்களன்று மாலை நடைபெறும் இந்த கட்டிடத் திறப்பு விழாவுடன், பள்ளி ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர்  ஏ.நடராஜன், திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ், மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.நாக ராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பாரதி சின்னப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். மாணவ, மாணவிகளின் விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகளுடன், சூப்பர் சிங்கர் புகழ் தமிழ் கிராமிய இசைத் தம்பதி செந்தில்கணேஷ், இராஜ லட்சுமி  மற்றும் திருப்பூர் லேலா.இளங்கோ குழுவினரின் கிராமிய தெம்மாங்கு பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பள்ளி மாணாக்கர் கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினருடன், பெற்றோர் களும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க உள்ளதாக யுனிவர்சல் பள்ளிக்குழுமத் தாளாளர் எஸ்.இராஜ கோபால் தெரிவித்துள்ளார்.

;