tamilnadu

img

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 17- திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஏற்கெனவே புறநோயாளிகள் பிரிவு செயல் பட்ட இடத்தில் அவசர சிகிச் சைப் பிரிவு தொடங்குமாறு மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத் துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கப் பணி நடை பெறுவதாக கூறப்படுகிறது. பேருந்து நிலையம் அருகில் இருந்த புறநோயாளிகள் பிரிவு தலைமை மருத்துவமனை வளா கத்திற்கு மாற்றப்பட்டு ஓராண்டு ஆகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றி, மருத்துவர்கள் பணியை ஒருங் கிணைக்கப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அத கேற்ற முன்னேற்றம் இல்லை.  அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தகவல் சொல்வ தில்லை, ரத்த பரிசோதனைக் கூடம் பாதுகாப்பின்றி குடோன் போல் உள்ளது. பெரும்பாலான ரத்த ஆய்வுகள் வெளியே தனி யாரிடம் எடுத்து வரும்படி நோயாளிகள் அனுப்பப்படுகின் றனர். அங்கிருக்கும் அவசர நோயாளிகள் பிரிவில் பணியில் இருப்போர் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்படு கின்றனர். தலைக்காயம் உள்ளிட்ட அவசர சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர், மருத்துவ உபகர ணங்கள் இல்லை. விபத்து, எலும்பு முறிவுக்குக் கூட காலதாமதம் செய்து சிகிச்சை அளிக்கப்படு கிறது. மருந்து வழங்கும் இடத்தி லும் கூட்டம் அதிகம் இருக்கிறது. ஆனால் போதிய பணியாளர்கள் இல்லை. எனவே இதை சீர் செய்ய வேண்டும். பழைய பேருந்து  நிலையம் அருகில் அவசர சிகிச் சைப் பிரிவு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல், பொங்குபாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட  கிராமங்களுக்கு நிர்ணயிக்கப் பட்ட அளவான 2 லட்சத்து 30  ஆயிரம் லிட்டர் குடிநீரை முறை யாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்குபாளையம் கிளைகள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தனியார் நிறுவனம் அத்துமீறல்
உடுமலை தாலுகா ஆமந்த கடவு கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த கிராமத்தில் தனியார் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் விளைநிலங்களை வாங்கி தற்போது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக 300 ஏக்கரில் 1000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அருகில் உள்ள பிஏபி வாய்க் காலையும் ஆக்கிரமித்துள்ளனர். விளைநிலம், நீர்வழிப் பாதை களையும் மறித்து மின்பாதை களை அமைத்துள்ளனர். இப்பணிக்காக அழைத்து வரப்பட்ட வெளிமாநிலத் தொழி லாளர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு விவசாய நிலங் களில் விளைபொருட்களை சேதம் செய்வதுடன், பெண்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர். இது தொடர்பாக ஏற்கெனவே கடந்த மே 20ஆம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதேசமயம் காவல் துறையினர் கிராமத்துக்கு வந்து அப்பாவி மக்களை மிரட்டு கின்றனர். எனவே இப்பிரச்சனை யில் தலையிட்டு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியு றுத்தி உள்ளனர்.

கல்வி கட்டணக் கொள்ளை
அவிநாசி தாலுகா பட்டம் பாளையத்தைச் சேர்ந்த எஸ்.சந்திரசேகரன் என்பவர் அளித்த மனுவில், திருப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களின் குளம், குட்டை களை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும். இதனால் மழைநீரை சேகரிக்க முடியும். தூர்வாரிய மண்ணை விவசாய நிலங்களுக் குக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரை கிராமத்தில் வசிக்கும் 120 ஆதி திராவிடர் குடும்பத்தி னருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் எம்எஸ் நகரில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப் பட்ட குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தும்படி கட் டாயப்படுத்துவதாக அங்கு சேர்க் கப்பட்ட குழந்தைகளை சீருடை யுடன் அழைத்துக் கொண்டு வந்த பெற்றோர்கள் ஆட்சியரி டம் மனு அளித்தனர்.