உடுமலை, மார்ச். 1- மானுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட் டது. இவ்விழாவில் அறிவியல் வினாடி வினா போட்டி களும், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, ஒப்பு வித்தல்போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாண வியர்களின் அறிவியல் கண்காட்சியும் நடைபெற் றது. இதனைப் பார்வையிட்ட அனைவரும் மாண வர்களிடம் கேள்விகள் கேட்டதோடு, எதிர்கால விஞ்ஞானிகளான மாணவர்களை வாழ்த்திப் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் பா.கலைமணி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர், தன்னார்வலர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் ஆகியோர் பரிசுகளை வழங்கி மாணவர்களைப் பாராட்டினர். நிறைவாக டி.ஹேனாஷெர்லி நன்றி கூறினார். இதேபோல், உடுமலை ஊராட்சி ஒன்றிய இராகல்பாவி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். சூரிய னிலிருந்து வருகின்ற ஒளியானது எவ்வாறு ஏழு வண்ணங்களாக பிரிகல் அடைகிறது போன்ற அறிவியல் செயல்பாடுகளை ஆசிரியர் கண்ண பிரான் செய்து காட்டினார்.