திருப்பூர் செப். 25- திருப்பூரில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் நோயாளிகள் உயிரி ழந்த சம்பவத்தில் மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வலியு றுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் கள் சந்திப்பில் அவர் மேலும் கூறிய தாவது, திருப்பூர் அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் இல்லாத தால் இதுவரை நான்கு பேர் உயிரி ழந்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர் வாகம் தரப்பில் இரண்டு பேர் மட் டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப் படுகிறது. திருப்பூர் மருத்துவமனை யில் போதுமான மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. இதர பணிகளுக்கும் கடுமையான ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு என்ன உள்கட்டமைப்பு இருக்க வேண்டுமோ, அவை எது வுமே இங்கு இல்லை என்பதையே இந்த உயிரிழப்புகள் சுட்டிக் காட்டு கிறது.
ஆகவே, இந்த உயிரிழப்பு கள் தொடர்பாக மாநில அரசு மக்கள் முன்னிலையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், கொரோனா தொற்று என்பது கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித் துக் கொண்டிருக்கிறது. முன்னதாக, மாநில முதல்வர் மூன்றே நாளில் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறினார். ஆனால், மாதங் கள் ஆறு கடந்துவிட்டன, இன்னும் தீர்க்கப்படவில்லை.
மாநில சுகா தாரத்துறை முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது. தமிழ்நாடு அரசு, மக் கள் நல்வாழ்வுத்துறைகள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து கொண்டி ருக்கிறது. எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதைக்கூட பகி ரங்கமாக அறிவிக்கப்படுவ தில்லை. உலக சுகாதாரத்துறை எச்ச ரித்தும், மோடியும், எடப்பாடியும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. மத்திய, மாநில அரசுகள் ஆளுகிற தகுதியை இழந்துவிட் டது. இவ்வாறு கே.சுப்பராயன் தெரி வித்தார்.
கலவரத்திற்குத் திட்டமிடும் பாஜக
தமிழ்நாட்டில் மிக மோசமான அரசியல் விளையாட்டை பாஜக தொடங்கிவிட்டது. அதனுடைய உச்சகட்டம்தான் ரவுடிகளை திட்டமிட்டு பாஜகவில் சேர்த்து வருகின்றனர். அதனுடைய நோக் கம், வருகின்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட் டார்கள் என்பதை கருத்தில் கொண்டு கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தி வாக்குப்பதிவு நடவடிக்கைகளைத் தடுக்கும் உள்நோக்கம் உள்ளது. மேலும், ரவுடிகளைப் பயன்படுத்தி திமுக கூட்ட ணியை முறியடிக்க வேண்டும். அதனை சிதைக்க வேண்டும் என்று பகிரங்கமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. வரம்பற்ற கார்ப்ப ரேட் பணபலம், அதிகார பலம் இவற்றையெல்லாம் பாஜக கையில் வைத்துள்ளது. ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் இவர்களை முறிய டிக்க வேண்டும். இவ்வாறு கே.சுப்பராயன் கூறினார்.