அவிநாசி, மே 19- அவிநாசி அருகே தெக்கலூரில் தினக் கூலிக்கு பணிபுரியும் வெளி மாநிலத் தொழி லாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி கிராம நிர்வாக அலுவல கத்தை முற்றுகையிட்டு திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் அதிகப்படி யானோர் பனியன் நிறுவனங்கள், நூற் பாலைகளில் தங்கி பணியாற்றி வருகின் றனர். மீதமுள்ளவர்கள் கட்டுமானத் தொழில் உள்ளிட்டவற்றில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் தற்போது அனைவரும் வேலையிழந்து, பட்டினியால் தவித்து வரும் நிலையில் அவர்களை சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பிடும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
மறுபுறம் தங்களது சொந்த செலவில் பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், அவிநாசி அருகே தெக்க லூரில் தங்கி தினக்கூலியாக பணியாற்றி வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த செலவில் ஊருக்கு செல்ல பணமில் லாததால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தக வலறிந்து வந்த அவிநாசி வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வியாழனன்று வெளிமாநிலம் செல் வோருக்கு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. எனவே , அன்று அனைவரையும் அனுப்பி வைக்க உரிய ஏற்பாடு செய்யப் படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்ற னர்.