tamilnadu

img

மாமேதை லெனின் நினைவு நாள்

திருப்பூர், ஜன. 21 - உலகில் சோசலிச சமுதாயம் சாத்தியமே என uஷ்யாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தலைமை ஏற்று நடத்திக் காட்டிய மாமேதை லெனின் நினைவு தினம் ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. ஊத்துக்குளி ஆர்.எஸ். இல் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா அலுவலகமான வி.பி.சிந்தன் நினைவகத்தில் மாமேதை லெனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஊத்துக்குளி தாலுகா மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கே.ஏ.சிவசாமி உள்பட கட்சி அணியினர் பங்கேற்று லெனினை நினைவு கூர்ந்தனர்.

;