tamilnadu

ஜன. 8 வேலைநிறுத்தத்தில் கூட்டுறவு ஊழியர்கள் பங்கேற்க முடிவு

திருப்பூர், டிச. 14– ஜனவரி 8ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட் டத்தில் தமிழகத்தில் கூட்டுறவுத் துறை ஊழியர்களும் பங்கேற்பதென தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் டிசம்பர் 14ஆம் தேதி திருப் பூரில் மாநிலத் தலைவர் ஆ.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அமல்படுத்தாமல் நிராகரிக்கப்பட்டு, காலம் தாழ்த்திடும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், நியா யவிலைக் கடை கூட்டுறவு சங்க ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், ஊழியர்கள் பணி வரன்முறை பாது காத்திடவும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21ஆயிரம் வழங்கிடவும், பொது விநியோகத் திட்டத்தைப் பாதுகாத்திடவும், பொதுத்துறை தனியார் மயம் ஆவதை நிறுத்திடவும், தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ப மாற்றுவதை திரும்பப் பெற வலியு றுத்தியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, காலிப் பணியிடங் களை நிரப்பவும், வேலை வாய்ப் பினை பெருக்கிடவும், விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும், மத்திய அர சின் மக்கள் விரோதக் கொள்கை யைக் கண்டித்து மத்தியத் தொழிற் சங்கங்கள் சார்பில் ஜன.8 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூட்டுறவு ஊழியர்கள் திரளாக பங்கேற்ப தென தீர்மானிக்கப்பட்டது.  முன்னதாக இக்கூட்டத்தில் மாநிலச் செயல் தலைவர் எம்.அசோ கன், மாநில பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம், துணைப் பொதுச் செயலாளர் பி.கௌ தமன், மாநில நிர்வாகிகள் எம்.சாதிக் அலி, சா.கிருஷ்ணராஜா, டி.பன்னீர் செல்வம், எம்.ரங்கசாமி உள்பட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.