tamilnadu

டாஸ்மாக் கடைகளை திறக்க மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு

திருப்பூர், மே 7- தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதை எதிர்த்தும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன் புதனன்று ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, திருப்பூரில் குடை கொண்டு வந்தால் மது கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவிற்கு எதி ராக அரசு அறிவிக்கும் உத்தரவுகளை மதிக்கும் மக்களின் உணர்வுகள் மீது கடும் தாக்குதலை தொடுப்பதாகும். ஏற் கனவே வேலையின்மை கடுமையாகியுள்ள சூழலில் தொழில்கள் அனைத்தும் முடங்கிப்போய் வருமானம் இல்லாத சூழலில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலைஉயர்வு மற்றும் சுங்கக்கட்டண உயர்வு என எரியும் நெருப்பில் எண்ணை யும் ஒருபுறம் ஊற்றப்படுகிறது.

 மேலும், ரேசன்கடைகளில் முழுமையாக பொருளை வழங்க வக்கற்று பெயரளவிற்கு பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்றி அலைக்கழித்துக் கொண்டு இருக்கிற அரசு, மதுபானக் கடைகளை திறக்க ஆர்வம் காட்டுவது மக்களுக்கு செய்யும் பெரிய நம்பிக்கை துரோகமாகும். அதுவும், குறைவான பரப்பளவில் அதிக அடர்த்தியோடு தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ள நிலை யில் இம்முடிவு கொரோனா நோய்த்தொற்று திருப்பூரில் வேகமாகப் பரவ வழிவகுக்கும். மேலும் அதிகளவில் பரி சோதனை நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதில் மதுபானக் கடைகளை திறப்பது கடும் சமூக கொந் தளிப்பை உருவாக்கும் என எச்சரிக்கிறோம். எனவே மது பானக் கடைகளை திறக்கும் நடவடிக்கையை தமிழக அர சும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.