tamilnadu

img

சாக்கடை, சாலை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் மனு

அவிநாசி, பிப். 18- திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் சாக்கடை மற்றும் சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர். அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் 15-வது வார்டுக்குட்பட்ட உம்மசெட்டிபாளையம் மற்றும் ராமநாத புரம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாத தால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி பள்ளிக்குழந்தைகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள்  உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர்.  இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சாலை வசதி,சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி அதிகாரியிடம் மனு அளித்த னர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், கிளை நிர்வாகிகள் சுப்பிரமணி, பாலசுப்பி ரமணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் தேவராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பேரூராட்சி அதிகாரி தெரிவித்தார்.