திருப்பூர், மார்ச் 10 – திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பது வட்டங்களில் மார்ச் 14ஆம் தேதி ரேசன் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்கள் நடைபெறுகின்றன. அவிநாசி வட்டம், புலிபார் கிராமத்தில் உள்ள கூட்டப்பள்ளி தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேசன் குறைதீர் முகாம் வரும் சனியன்று நடை பெற உள்ளது. இதேபோல், திருப்பூர் வடக்கு வட்டம், பொங்குபாளையம் ஊராட்சிமன்ற அலுவலகத்திலும், தெற்கு வட்டம், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு சங்கத்திலும், ஊத்துக்குளி வட்டம், கணபதிபாளையம் ஊராட்சி, வேலம்பாளையம் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு சங்கத்திலும், பல்லடம் வட்டம், மாதப்பூர் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு கடன் சங்கத்திலும், உடு மலைப்பேட்டை வட்டம், புதுப்பாளை யம் ஊராட்சி, அடிவள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் வட்டம், பாப்பங்குளம் ஊராட்சி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் திலும், தாராபுரம் வட்டம், குப்புச்சி பாளையம் ஊராட்சி, நஞ்சியம்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திலும், காங்கேயம் வட்டம், வடசின்னாரிபாளையம் ஊராட்சி, கடலைக்காட்டு புதூர் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு கடன் சங்கத்திலும் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெறும். இம்முகாமில் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலு வலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வா ளர்கள் பங்கேற்கின்றனர். எனவே பொது மக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைக ளுக்கான மனுக்கள் வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம் போன்ற கோரிக் கைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளு மாறு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.