tamilnadu

img

நல்லூர் அருகே லாரி கவிழ்ந்து மின் கம்பம் சேதம்

திருப்பூர், ஆக. 24– திருப்பூர் மாநகரம் நல்லூர் அருகே காங்கேயம் சாலை யில் லாரி ஒன்று கவிழ்ந்ததால் சாலையோர மின்கம்பம் பலத்த சேதமடைந்ததோடு அவ்விடத்தில் நிறுத்தப்பட்டி ருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவ னத்திற்கு பனியன் துணிகளை கண்டெய்னர் லாரியின் மூலம் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அந்த லாரி  காங்கேயம் சாலை வழியாக திருப்பூர் நகருக்குள் சனியன்று வந்து கொண்டிருந்தபோது, நல்லூர் அருகே கட்டுப் பாட்டை இழந்து சாலையோரம் மின் கம்பத்தில் மோதியது.

இதில், மின் கம்பம் பலத்த சேதமடைந்ததோடு சாலை யோரம் தேநீர்க்கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மூன்றும் சேதமடைந்தன. மின் கம்பம் சேதமடைந்ததால் உடனடியாக அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் மின் கசிவினால் உயிரி ழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. உடனடியாக ஊரகக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் காவல் துறையினர் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய  லாரியை மீட்டனர். இந்த விபத்து ஏற்பட்டவுடன் லாரி ஓட்டுநர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

;