tamilnadu

ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி

அவிநாசி, ஜூலை 8- தமிழக அரசின் ஊரக புத்தாக்கத் திட்டத்தில் அவிநாசி யில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.10.5 லட்சம் கடன்  உதவி திங்களன்று வழங்கப்பட்டது. தமிழக அரசு ஊரக புத்தாக்கத் திட்டம், கொரோனா சிறப்பு நிதி ஆதாரக்கடன் தீர்வின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உற்பத்தி மூலதன நிதி வழங்கப்பட்டு வரு கிறது. இதில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம் மற்றும் வேலாயுதம் பாளையம் ஊராட்சிப்பகுதியை சேர்ந்த 22 பேருக்கு தொழிற் கடனும், 8 பேருக்கு நலிவுற்ற மாற்றுத்திறனாளி கடனும் என 30 பேருக்கு ரூ.10.5 லட்சம் கடன் உதவி வழங்கப் பட்டது. அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீஸ் தலைமையேற்று கடன்களை வழங்கினார். இந்நிகழிவில்  புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, புதுப் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி பிரியா, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட வட்டார அணி தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;