அவிநாசி, பிப். 5- எல்ஐசி பங்குகளை தனியா ருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து அவிநாசியில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யப்பட்டது. இதில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற் பது என்று மத்திய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் முன்மொ ழிந்துள்ளார். மத்திய பாஜக அர சின் தனியார் மய, தாரளமய, கார்ப்பரேட் ஆதரவான இப்போக் கைக் கண்டித்து இந்திய நாடு முழுவதும் ஒரு மணி நேர வேலை யினை புறக்கணித்து எல்ஐசி அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக அவிநாசி யிலும் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க நிர்வாகிகள் ராஜய்யா, சிவக்குமார், ராயப்பன் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட ஊழியர்கள், முகவர் கள் திரளாக கலந்து கொண்டனர்.