tamilnadu

மடத்துக்குளத்தில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்

திருப்பூர், மே 31- மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜோத்தம்பட்டி மற்றும் பாப் பான்குளம் ஆகிய ஊராட் சிப் பகுதிகளில் ரூ.1.41 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சனி யன்று தொடங்கி வைத் தார். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ஆகிய திட்டத் தின் கீழ் ஸ்ரீராமபட்டினம், ஜோதிநகரில் ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு கட்டிடம் மற்றும் வெள்ள னூர்அம்மன் கோயில் அரு கில் ரூ.70.70 லட்சம் மதிப் பீட்டில் மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு கட்டிடம் என ரூ.1.41 கோடி மதிப்பி லான பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் துவக்கி வைத்தார்.