tamilnadu

உயர் மின்கோபுரப் பணியில் மத்திய அரசுக்குத் தொடர்பில்லையா? பாஜக அண்ணாமலைக்கு விவசாயிகள் ரூ.1 கோடி சவால்

திருப்பூர், நவ. 1– உயர் மின்கோபுரம் அமைப்ப தற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என நிரூபித் தால் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ரூ.1 கோடி தரு வதாக உயர் மின்கோபுர எதிர்ப்பு இயக்க விவசாயிகள் சவால் விடுத் துள்ளனர். தமிழக விவசாயிகள் பாதுகாப் புச் சங்கம் மற்றும் நேர்மை மக்கள் இயக்கத்தின் சார்பில் உயர் மின் கோபுர எதிர்ப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் சனியன்று திருப்பூரில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை உயர் மின் கோபுரம் அமைப்பதற்கும், மத்திய அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு எந்தத் திட் டத்தையும் செயல்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று கூறியுள்ளார். அவர் கொடுத்துள்ள செய்தி மிகவும் தவ றானது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமமா னது. இதுபோன்ற ஒரு தவறான செய்தியை முன்னாள் ஐபிஎஸ் படித்தவரிடம் இருந்து விவசாயி கள் எதிர்பார்க்கவில்லை. இந் திய தந்திச் சட்டம் 1885 ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது. அந்த சட்டம் தற்போது மத்திய அரசின் சட்டமாக உள்ளது. அந்த சட் டத்தை வைத்துத்தான் நாடு முழு வதும் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக் கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது, மத்திய அரசுக்கும், இந்த திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது மாபெரும் தவறாகும். மேலும், மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் இந்திய தந்திச் சட்டத்தைக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து தமிழ்நாடு மாநிலம் காங்கேயம் அருகே உள்ள புகளூர் வரை 1800 கி.மீ., தூரத்திற்கு உயர் அழுத்த மின்பாதை அமைத்து வருகிறது. அதே பவர்கிரிட் நிறுவனம் தமிழ கத்தில் தற்போது ஆறு உயர் மின் கோபுரங்கள் திட்டங்களை, விவ சாய விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தி வருகிறது. இத்திட் டங்களை இந்திய தந்தி சட்டம் 1885னைக் கொண்டு விவசாய நிலங்கள் வழியாக பவர் கிரிட் நிறுவனம் செயல்படுத்துவதற் காக, மத்திய அரசு தனது அதிகா ரத்தைப் பயன்படுத்தி கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது. உண்மை நிலை இப்படி இருக்கும் போது, இத்திட்டத்திற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று அண்ணாமலை எதை அடிப்படை யாக வைத்துக் கூறுகிறார். மத்திய மின்துறை அமைச்ச ரின் அதிகார வரம்பில்தான் உயர் அழுத்த மின்கோபுர திட்டங்க ளுக்கு அனுமதி கொடுக்கும் துறை யும் உள்ளது. எனவே இதுபோன்ற ஒரு தவறான தகவலை அண்ணா மலை சொல்லியிருப்பது கண்டிக் கத்தக்கது. உயர் அழுத்த மின் கோபுரத்தை நிலத்தில் அமைக்கா மல் காற்றிலா அமைக்க முடியும் என்றும் துடுக்குத்தனமாகக் கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளும், விவசாய சங்கங்க ளும் உயர் அழுத்த மின்கோபுரங் கள் அமைத்து, மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கு பதிலாக, நவீன தொழில்நுட்பத்தில்  விவ சாய நிலத்தை பாதிக்காமல், சாலையோரம் கேபிள் எனப்படும் புதைவடம் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்திப் போராடி வரு கின்றனர். பிரதமர் மோடி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஆப்பிரிக்க நாடான டிஜிபூட்டிக்கு 3500 கி.மீ., தூரம் கடலுக்கடியில் 1100 கிலோ வாட் மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு சென்று விற்பதற்கான திட்டத்தை அறிவித்து செயல்ப டுத்தி வருகிறார். குஜராத் மாநி லம் போர்பந்தரில் இருந்து சவுதி அரேபியா வழியாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு சென்று விற்கும் திட்டப் பணிகளைச் செய்து வரு கிறார். விபரங்கள் எதுவுமே தெரி யாமல் இதுபோன்ற தவறான செய்தியை, பொய் பரப்புரையை பத்திரிகைகளில் அவர் தெரிவித் துள்ளதற்கு உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பிலும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். தானும் பத்திரிகைகளுக்குப் பேட்டி தர வேண்டும் என்று அவ சரகதியில் இந்த விசயத்தில் எவ் வித புரிதலும் இல்லாமலும், இந் திய தந்திச் சட்டம் குறித்து சட்டத் தெளிவில்லாமலும் அவர் அளித்த பொய் தகவல், பொய் பரப்பு ரையை அவர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது குறித்து அவர் எங்களோடு விவாதம் செய்ய  விரும்பினால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் நேரடியாக விவாதத்திற்கு அழைக் கிறோம். அவர் வரத் தயாரா? மத்திய அரசுக்கும், இந்திய தந்திச் சட்டத்துக்கும், உயர் மின்கோபு ரங்கள் அமைப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் நிரூபித்து விட்டால் அண்ணாமலைக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் ரூ.1 கோடி பரிசு அளிக்கத் தயார் என்று வழக்கறிஞர் மு.ஈசன் தெரிவித் தார்.  இதில், விவசாயிகள் பாது காப்பு இயக்கத் தலைவர் சண்முக சுந்தரம், நேர்மை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழ.இரகு பதி ஆகியோர் உடனிருந்தனர்.