tamilnadu

போதையில் கணவர் தகராறு: பெண் தற்கொலை

அவிநாசி, ஆக. 10 – கொடைக்கானல் பகுதி யைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (34). இவரது மனைவி சுமதி(30). இவர்க ளுக்கு 9 வயதில் மகளும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் கடந்த 4 மாதங்களாக சேவூர் குலா லார் வீதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலை யில், கணவர் அருண்பாண் டியன் தினமும் மது அருந்தி வந்து, மனைவியி டம் தகராறு செய்து வந்துள் ளதாகத் தெரிகிறது. இந் நிலையில், பொது முடக்க நாளான ஞாயிறன்றும் வழக்கம்போல் அருண் பாண்டியன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தக ராறு செய்துள்ளார். இத னால் மனமுடைந்த சுமதி வீட்டினுள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார். தகவலறிந்து சம்பவ யிடத்திற்கு வந்த சேவூர் போலீசார் சுமதியின் சட லத்தை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசா ரித்து வருகின்றனர்.

;