tamilnadu

img

கல்வெட்டுகளை தனியார் கல்லூரி மாணவர்கள் ஆய்வு

அவிநாசி, ஜூலை 16 -  சேவூர் அருகே குட்டகம் ஊராட்சியில் அமைந்துள்ள பழமையான கல்வெட்டுகளை கோவை தனியார் கல்லூரி  மாணவர்கள்  திங்களன்று ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட கூலேகவுண்டன்புதூரில் பழமை வாய்ந்த மொக்கனீஸ்வரர்-மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலின் வளாகத்தில் பழமையான கற் பலகையில் பொறிக்கப்பட்ட இரு கல்வெட்டுகள் உள்ளது.  அதில் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு ஆகும். இது குறித்து கோவை பி.எஸ்.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் பேராசிரியர் ரவி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து பேராசிரியர் ரவி கூறியதாவது, குட்டகம்  என்ற ஊர் முற்காலத்தில் குடவோடான இராசவிச்சாதிர நல்லூர் என்று அழைக்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த  வெள்ளாள குலத்தைச் சேர்ந்த விச்சாதிரனின் மனைவி  எறுளங்கோதை என்பவர் இந்த ஆலயத்தை அமைத் துள்ளார் என்பதற்கு சான்று உள்ளது. மேலும் அக்காலத் தில் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், தனி கவன மாக பொருளாதார பலமும் பெற்றிருந்ததையும் உணர்த்து கிறது. இது கி.பி.1009ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்றாலும்,  1000 ஆண்டுகளை கடந்தும்,  மண்ணின் பெருமையை உணர்த்துகிறது என தெரிவித் தார்.