tamilnadu

ஆனைமலை வனப்பகுதியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

உடுமலை, மார்ச் 1- கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்ப கம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் செடிகள், கொடிகள் மற் றும் புற்கள் காயத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக  காட்டுத்தீ ஏற்பட வாயப்புள்ளது. இப்பகுதிகளை கண்ட றிந்து 6-3 மீட்டர் அகலத்தில் 180 கிலோ மீட்டருக்கு தீ தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீ  தடுப்புக் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதன் தொடர்ச்சியாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பி.கே.திலீப் உத்தரவின்படி உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் வனச்சரக அலுவ லர்கள் செ.தனபாலன், ஆர்.முருகேசன் மற்றும் வனப்பணி யாளர்கள் அடங்கிய குழுவினர் மூலம் 17 மலைவாழ் கிரா மங்களிலும் தீ தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத் தப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்தில் காட்டுத்தீயினால் வனப்பகுதியிலுள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள் சிறிய உயிரனங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான வன உயிரினங்களும் அதன் வாழ் விடங்களில் அழிந்தும், மூலிகை செடி, கொடிகள் மற்றும் மரங்கள் கருகி அழிந்து விடும். நீர் நிலைகள் வறண்டு  அப்பகுதி தமை் குன்றிவிடும். இப்பாதிப்புகள் அனைத் துமே மனிதஇனத்திற்கே வந்தடையும் என விளக்கப்பட்டு வருகிறது.