tamilnadu

குன்னத்தூர் பொன்காளியம்மன் நகரில் காங்கிரீட் பாதை பணி தொடக்கம்

திருப்பூர், மார்ச் 15 – திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பொன் காளியம்மன் நகரில் காங்கிரீட் பாதை அமைக்கும் பணி ஞாயிறன்று தொடங்கப்பட்டது. பொன்காளியம்மன் நகரில் பல ஆண்டு காலமாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டது. அத்துடன் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பொன்காளியம்மன் நகர் தெருக்களுக்கு காங்கிரீட் பாதை அமைக்கும் பணியை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.