tamilnadu

img

காங்கேயத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா

திருப்பூர், மார்ச் 10 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் ஐம்பெரும் விழா காங்கேயத்தில் கொண்டாடப் பட்டது.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் காங்கேயம் கிளை 18 ஆம் ஆண்டு துவக்க விழா, மகளிர் தினவிழா, ஜாக்டோ ஜியோ போராட் டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசி ரியர்களுக்கு பாராட்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழா காங்கேயத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு வட்டார தலைவர் பானுஸ்ரீ கார்த்திகா தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவர் இரா.பூபதி வரவேற்றார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் மூ.மணிமேகலை, மாநில துணைத் தலைவர் ஜான்கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;