அவிநாசி, பிப். 15- சேவூரில் கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தி யாளர் மையம் வெள்ளியன்று துவக்கப்பட்டது. அவிநாசி அருகே சேவூரில் வேளாண்மை பொறி யியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட இம்மை யத்தை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் மனோகரன் துவக்கி வைத்தார். பொறியாளர் ரவிச் சந்திரன், உதவி பொறியாளர் யுவராஜ், உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன், மையப் பொறுப்பாளர் கள் மோகன்குமார், கந்தசாமி, கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இம்மையத்தின் மூலம் விவசாய விளைபொருள்களை, மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்யப் படவுள்ளது. இதில் சிறுதானியங்கள், நிலக் கடலை, தேங்காய், எள் உள்ளிட்டவைகள் அரவை செய்யப்பட்டு, எண்ணெய், சிறுதானிய பவுடர்களாகவும் உருவாக்கி விற்பனை செய்யப் படவுள்ளது என கூறப்பட்டது.