திருப்பூர், அக். 20 – பல்லடம் வட்டம், அனுப்பட்டி கிராமத்தில் கடும் பாதிப்பை ஏற் படுத்தி வரும் தனியார் ஸ்டீல் கம்பெனிக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டும், இந்த ஆலையை மூடுவதற்கு உதவும்படியும் பி.ஆர்.நடராஜன் எம்.பி.யிடம் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனுப்பட்டி கிராம மக்கள் சார்பில் கோவையில் பி.ஆர். நடராஜன் எம்.பி.யை நேரில் சந்தித்து அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்ப தாவது: பல்லடம் வட்டம், அனுப்பட்டி ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 170 குழந்தைகள் படிக்கும் நடுநிலைப் பள்ளியும், 30 குழந்தைகள் கொண்ட பால்வாடியும் உள்ளது. கூட்டுறவு வங்கி, சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன்பெற்று தறித் தொழில், கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆவின் உள்பட நான்கு பால் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊரில் பெருவாரியான நிலங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளன. இதில் காற்றாலைக்கு கொடுக்கப்பட்டது போக, மீதி நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கிராமப் பொருளாதா ரத்தைப் பாதிக்கும் விதமாக தற் போது கண்ணப்பன் அலாய்ஸ் அன்டு ஸ்டீல் கம்பெனி என்ற நிறுவனம் (முன்பு ஆதிஸ்ரீ அலாய்ஸ்) தனது தற்போதைய உற்பத்தியான 28 ஆயிரத்து 800 டன்னில் இருந்து பல மடங்கு அதிகரிக்க ஆலை விஸ்தரிப்பு பணியில் இறங்கி யுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் கிராம மக்களின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய உற்பத்தி நிலையிலேயே பாதுகாப் பற்ற முறையில் ஆலை வெளியேற் றும் நச்சுப்புகையி னால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தோல் நோய், புற்று நோய்பாதிப்பில் சிக்கியுள்ள நிலையும் உள்ளது. எனவே மேற்படி ஆலை விஸ்தரிப்பினால் அனுப்பட்டி கிராமமும், சுற்று வட்டார கிராமங்க ளும் கடும் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் உள்ளது. இதுவரை கிராம சபை கூட் டங்களின் தீர்மானம் இயற்றியும் முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளிக் கப்பட்டது. போராட்டமும் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுவரை எந்த எதிர்ப்பும் இன்றி ஆலை செயல்படு வதாக நிர்வாகம் தவறான தகவலை அளித்து திசை திருப்புகிறது. இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு அளித்து, வழிகாட்டுவதுடன், மக்களுக்கும், கிராம வாழ்வாதாரத்திற்கும் எதிரான நிறுவனத்தை நிரந்தரமாக மூட உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர். இந்த சந்திப்பின்போது மார்க் சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்திய மூர்த்தி, பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட் டோரும் கிராம மக்களுடன் கலந்து கொண்டனர்.