திருப்பூர், மார்ச் 14 - திருப்பூரில் மத்திய அதிவிரைவு படையினரின் கொடி அணிவகுப்பு சனியன்று நடைபெற்றது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக திருப்பூரில் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகி றது. இந்த சூழ்நிலையில் மத்திய அதிவிரைவு படையின் துணை கமாண்டர் சிங்காரவேலு தலைமையில் 120 மத்திய அதிவிரைவு படையினர் குமரன் சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும், இரு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகன மும் வரவழைக்கப்பட்டுள்ளது.