திருப்பூர், மே 31 - அரசு விதிமுறையையும் கடைப்பிடிக்காமல், கொரோனா தடுப்பு சமூக விலகலையும் பின்பற் றாமல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு ஆளும் கட்சியின் நிகழ்ச்சியை படாடோபமாக நடத்தினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். கொரோனா ஊரடங்கு அம லில் உள்ள நிலையில், ஆளும் அதிமுகவினர் இதை தங்களுக்குச் சாதகமாக அரசியல் ஆதாயம் தேடும் குறுகிய நோக்கத்தோடு பயன்படுத்தி வருகின்றனர். குறிப் பாக கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, பல் வேறு அரசியல் கட்சிகள் பொது நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்க் கும் நிலையில் அதிமுகவினர் மட்டும் கூட்டம் சேர்த்து வருகின் றனர்.
மடத்துக்குளம் வட்டத்துக்கு உட்பட்ட காரத்தொழுவு, துங் காவி ஊராட்சிகள், கணியூர் பேரூ ராட்சி, ஜோத்தம்பட்டி ஊராட்சி, மடத்துக்குளம் பேரூராட்சி, பாப் பன்குளம் ஊராட்சி, குமரலிங்கம் பேரூராட்சி, சங்கரமநல்லூர் மற் றும் தளி பேரூராட்சி ஆகிய பகுதி களில் சனிக்கிழமை அதிமுக சார் பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச் சியை நடத்தினர். இதில் தூய் மைப் பணியாளர்கள், ஆதரவற்ற வர்கள், மாற்றுத் திறனாளிகள் என 5ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர். அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் உடுமலை ராதாகிருஷ் ணன் ஆகியோரின் படங்கள் அச்சிட்ட பைகளில் அரிசி வழங்கப் பட்டது. அத்துடன் ஒவ்வொரு பகுதியிலும் இரட்டை இலை சின்னம் பொறித்த பிளக்ஸ் தட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட “விழித்திரு…விலகி இரு…வீட்டில் இரு..” என்ற முழக்கத் தையும் பிளக்ஸ் தட்டியில் அச்சிட் டிருந்தனர்.
பின்புலத்தில் அந்த தட்டி இருக்க ஆளும் கட்சியினர் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு ஒட்டி நின்றனர். இவ்வாறு கொரோனா பர வல் தடுப்பு விதிமுறையை மாநில அமைச்சரே காற்றில் பறக்கவிட் டார். போதாதென்று ஆளும் கட்சி யின் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், வருவாய் அலுவலர் சுகுமாரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் ரூபன் சங்கர் ராஜ் ஆகிய மாவட்ட உயர் அரசு அதிகாரிக ளும் பங்கேற்றனர். இவ்வாறு மாநில அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ராதா கிருஷ்ணனே, கொரோனா சமூக விலகலையும் காற்றில் பறக்க விட்டு, அரசு விதிமுறையையும் புறக்கணித்து நிகழ்ச்சியை நடத் தினார். அதைவிட, திருப்பூரில் கடந்த 28 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் விரைவில் பச்சை மண்டலமாக மாறப் போகிறது, எனவே அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடித்து ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறியது கேலிக் கூத்தாக இருந்தது. குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் இவர்கள் இதுபோல் வெட்கமில்லாமல் நடந்து கொள்கின்றனர் என்று உள்ளூர் மக்கள் எள்ளி நகையாடி னர்.