tamilnadu

திருப்பூரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

திருப்பூர், பிப். 18 – திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உல்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் அரங்க.மதிவாணன் கூறியிருப்ப தாவது:   கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி (வியாழன்) காலை 10.30 மணி முதல் மாலை 4 வரை வெள்ளாடு வளர்ப்பு பற்றிய பயிற்சி நடை பெற உள்ளது. இதில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் உள்ள கால்நடை விவசாயிகள் பங் கேற்று வெள்ளாடு வளர்ப்பு குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். பயிற்சிக்கு வருபவர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.