tamilnadu

img

5, 8ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 18 – தமிழகத்தில் நடப்பாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  அரசுப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக இளை ஞரணி சார்பில் தங்கராஜ் தலைமை வகித் தார். திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ், அவைத் தலைவர் ஈஸ்வர மூர்த்தி உள்பட திமுக இளைஞரணி, மாணவரணியினர் பங்கேற்று 5, 8 வகுப் புகளுக்கு அரசுப் பொதுத் தேர்வு நடத்து வதைக் கைவிடக் கோரியும், மத்திய அரசு இந்தி மொழியைத் திணிக்க முயல்வதை யும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

;