tamilnadu

img

நொய்யல் சின்னமுத்தூர் தடுப்பணையில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர், அக். 19 – திருப்பூர் நொய்யல் ஆற்றிலுள்ள சின்னமுத்தூர் தடுப்பணையில் பள்ளி மாணவர் குழு ஆய்வு செய்த தில் தண்ணீரின் மொத்த உப்புத் தன்மை மற்றும் காரத்தன்மை குறைந்துள்ளதாக கண்டறிந்துள் னர். கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிருந்து ஆத்துப்பாளை யம் அணை விவசாயப் பாசனத் திற்கு சனிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கோவை வெள்ளிங்கிரி மலை பகுதியில் உற்பத்தியாகி வரும்  நொய்யல் ஆறு திருப்பூரைக் கடந்து ஈரோடு, கரூர் மாவட்டங் கள் வழியாக நொய்யல் என்ற இடத்தில் காவிரியுடன் சேர்கி றது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அசுர வளர்ச்சி பெறத் தொடங்கிய நிலையில் சாயத் தொழிலும் விரிவடைந்தது. துணி களுக்குச் சாயமேற்றப்பட்ட பிறகு ரசாயண கழிவுகள் அடங்கிய சாய கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப் படாமல் நொய்யல் ஆற்றில் வெளி யேற்றப்பட்டது. இதனால் நொய் யல் ஆற்றில் உயிர்த்தன்மை கடு மையாக பாதிக்கப்பட்டு அதில் செல்லும் நீர் மட்டுமின்றி, அந்த நீர் சென்று சேர்ந்த நிலப்பகுதிக ளும் கடுமையான சூழல் சீரழிவுக்கு ஆட்பட்டது.  எனவே பாசனத்திற்காக கட் டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணையும், சின்னமுத்தூர் தடுப் பணையும் கூட நச்சு சாயக்கழிவு நீரைத் தேக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள் நீதிமன்றங்களில் நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தினர். ஒரு கட்டத்தில் அந்த அணையில் நச்சு சாயக்கழிவு நீரைத் தேக்கக் கூடாது என்றும், மழைக் காலங்களில் அடர்த்தி மிகுந்த சாயநீரை வெள்ள நீருடன் சேர்த்து காவிரி வழியாக கடலுக் குத் திறந்துவிடும் நிலையும் இருந் தது.  இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் திருப்பூரில் இருந்த மொத்த சாய ஆலைகளையும் மூடும்படி உத்தரவிட்டது. முழுமையான மறுசுழற்சித் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், அதை கண் காணிக்க நிபுணர் குழுவையும் நியமித்தது. இதனால் திருப்பூரில் அனைத்து சாயஆலைகளும் மறுசுழற்சித் தொழில்நுட்பத்துக்கு மாறின.  இதன் பிறகு நொய்யல் ஆற் றில் சாயக் கழிவுநீரை வெளி யேற்றுவது வெகுவாகக் குறைந் தது. எனினும் சில நிறுவனங்கள் சட்டவிரோதமாகவும், ரகசியமாக வும் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவு நீரை அவ்வப்போது ஆற் றில் வெளியேற்றுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது. இதற்கிடையே திருப்பூர் பெம் பள்ளி மாணவர்கள் கடந்த 2017- ஆம் ஆண்டில் இருந்து நொய்யல் ஆற்றில் மழை காலத்தில் செல் லும் நீரை ஆய்வு செய்து வருகின் றனர். இதில் கடந்த இரு ஆண்டு களாக நொய்யலில் செல்லும் நீரின் டிடிஎஸ் எனப்படும் மொத்த உப்புத் தன்மை மற்றும் பி.எச். எனப்படும் காரத்தன்மை வெகு வாகக் குறைந்துள்ளதை கண்ட றிந்தனர்.  குறிப்பாக மொத்த உப்புத் தன்மை கடந்த காலத்தில் 5 ஆயிரம் டிடிஎஸ்  அளவுக்கு மேல் இருந்து வந்தது. (பி.எச்) காரத் தன்மையும் 10க்கு மேல் இருந்தது. தற்போது வெள்ளநீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் சின் னமுத்தூர் தடுப்பணையில் சனிக் கிழமை பெம் பள்ளி மாணவர்கள் குழு மேற்கொண்ட பரிசோதனை யில் காரத்தன்மை 8 என்ற அள வுக்கு குறைந்திருந்தது. அத்துடன் மொத்த உப்புத்தன்மையும் 1000க்கு கீழ் குறைந்திருக்கிறது என்று கண்டறியப்பட்டது. இந்த தன்மையுள்ள நீர் விவசாயப் பாச னத்துக்கு உகந்ததாக இருக்கும். இதன் விளைவாக நொய்ய லில் செல்லும் மழை நீரை சின்ன முத்தூர் தடுப்பணையில் தேக்கி வைத்து, ஊட்டுக்கால்வாய் வழி யாக 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஆத் துப்பாளையம் அணைக்குத் திருப்பி விட்டுள்ளனர். இதன் மூலம் அங்குள்ள 20ஆயிரம் ஏக் கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் ஆற்றுத் தண்ணீரை விவசாயப் பாசனத்திற்கு பயன் படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் நிர்வாகிகளில் ஒருவரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளரு மான ஆ.ஈசுவரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வழக்கமான காலத்தில் நொய் யல் தண்ணீரை பயன்படுத்த முடி யுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியிருந்தாலும், மழைக்கா லத் தண்ணீரை விவசாயப் பாச னத்திற்கு பயன்படுத்த முடிந்த நிலை வந்திருப்பது குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஆகும். மேலும் கடந்த பல ஆண்டு கால மாக ஒரத்துப்பாளையம் அணையி லும், சின்னமுத்தூர் தடுப்பணை யிலும் தண்ணீரைத் திறந்து விடா மல் மூடப்பட்டே இருந்ததால் அணையின் தடுப்புக் கதவுகள் துருப்பிடித்து பயன்படுத்த முடி யாத நிலையில் இருந்தன. சாய ஆலைகள் நீதிமன்ற உத்தரவின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்காக வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் இருந்து கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரத்துப் பாளையம், சின்னமுத்தூர் அணை களின் மதகு  கதவுகள் சீரமைக் கப்பட்டன. இந்நிலையில் தற்போது 20  ஆயிரம் ஏக்கர் விவசாயப் பாச னத்துக்கு நொய்யல் வெள்ள நீர் திருப்பி விடப்பட்டிருப்பது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி களுக்கு வாழ்வாதாரத்தை மீட் டமைக்க பயன்படுவது உறுதி என்றும் சூழல் ஆர்வலர்கள் கூறு கின்றனர்.