tamilnadu

img

திருப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளி பலி

திருப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர்.


தெற்கு திருப்பூர் காவல்துறை துணை ஆணையர் நவீன் குமார் கூறுகையில், இரசாயன சலவை தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியினுள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது முதலில் ஒரு தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கமடைந்ததைத் தொடர்ந்து மற்ற தொழிலாளிகள் அவரை காப்பாற்ற முயன்றதில் விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அன்வர் ஹுசைன் பார்புயா, பரூக் அகமது, அபு மற்றும் தில்வார் ஹுசைன் என இறந்த 4 பேரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் வருவாய்த்துறை அலுவலர் செண்பகவள்ளி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் தொழிற்சாலை முறையான அனுமதியோடு இயங்குகிறதாக என சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், தொழிற்சாலையின் உரிமையாளரான ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


;