அவிநாசி, ஜூன் 25- தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் அவிநாசி ஒன்றி யத்திற்கு ரூ.1 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தனிநபர் கடன் ரூ.50 ஆயிரம் வரை, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் களுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலும் கடனுதவி வழங்கு வதற்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.
அதனடிப்ப டையில் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சியில், 300க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி வழங்க பயனா ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேவூர் ஊராட்சியில் புதனன்று கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.