உடுமலை, ஜுன் 7- தமிழகத்தில் பிற மாநிலத் தவர்களுக்கு அரசு பணி வழங்கும் அரசாணையை ரத்து செய்திட வலியுறுத்தி உடுமலையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் செயல்படும் அரசு அலுவலகங்களிலுள்ள பணிகளை பிற மாநிலத்தவர்களுக்கு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுதல் சட்டம் 2016ஐ உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளி யன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் பொது செயலாளர் கு. ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழக வெளியீட்டு செயலாளர் இரா. மனோகரன், மாவட்ட செயலாளர் சு. சிவசங்கர், கா. கருமலையான், யாழ் நடராசன், திமுக சார்பில் நகர செயலாளர் எம்.மத்தீன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ரணதேவ், மதிமுகவின் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.