tamilnadu

img

உள்ளாட்சி ஊழியர்கள் ஊதியக் கோரிக்கைகளுக்காக திருப்பூர் ஆட்சியரகத்தில் 800க்கும் மேற்பட்டோர் முற்றுகை

திருப்பூர், ஜூன் 17 – திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளிலும், மாந கரம் உள்ளிட்ட நகர உள்ளாட் சிகளிலும் வேலை செய்யக் கூடிய துப்புரவு, குடிநீர் ஊழியர் கள் தங்களது சம்பளக் கோரிக் கைகளுக்காக சிஐடியு தலைமை யில் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தை திங்களன்று முற்று கையிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில், 265 கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் டேங்க் ஆப்பரேட்டர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடு களைக் களைய வேண்டும். 2017 அக்டோபர் முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை களை அனைத்து ஊராட்சிகளும் வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்களுக்கு மாத ஊதியம் முறையாக ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். தொட்டி சுத்தம் செய்யும் அலவன்ஸ் தொகையை ரூ.1000 ஆக உயர்த்திட வேண் டும். டேங்க் ஆப்பரேட்டர், துப்பு ரவு ஊழியர்களுக்கு மாத ஓய்வூ தியம் ரூ.2000 மற்றும் பணிக் கொடை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். 2000ஆவது ஆண் டுக்குப் பின் பணியமர்த்தப்பட்ட டேங்க் ஆப்பரேட்டர்களை நிரந்தரமாக்கி முழு ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் இம்மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, பல்லடம், வெள்ளகோவில், தாரா புரம், காங்கேயம் ஆகிய 5 நக ராட்சிகள் மற்றும் 16 பேரூராட் சிகளில் ஆயிரக்கணக்கில் துப்புரவுத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் ஒப்பந்த தொழிலா ளர்களாகவும், தினக்கூலிகளா கவும் வேலை செய்கின்றனர். ஆட்சியர் அறிவிக்கும் தினக்கூலி கூட அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இஎஸ்ஐ, இபிஎப் பிடித்தம் செய்த விபரங் களையும் தருவதில்லை. சம்பள ரசீதும் தருவதில்லை. எனவே நடப்பு 2019 – 20ஆம் ஆண்டுக்கு துப்புரவுத் தொழிலாளர், ஓட்டு நர்களுக்கு தினக்கூலி நிர்ண யித்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்த இபிஎப்., இஎஸ்ஐ ஆகி யவற்றுக்குரிய ஆவணங்களை உடனடியாக வழங்குவதுடன் மாதச்சம்பள ரசீதும் வழங்க வேண்டும், துப்புரவு, குடிநீர் மற்றும் ஓட்டுநர் என அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் களின் கோரிக்கைகளை மையப் படுத்தி திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந் திரள் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள் ளாட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிசாமி தலை மையில் மாவட்டம் முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்கள் 800க்கும் மேற் பட்டோர் ஆட்சியரகத்திற்கு எதி ரில் ராமசாமி முத்தம்மாள் மண்ட பம் முன்பாக அணிதிரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரகத்துக்குள் அணி திரண்டு சென்றனர். இதில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்டத்  தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், சங்கப் பொருளாளர் தண்ட பாணி, மாவட்ட சிஐடியு துணைத் தலைவர்கள் ப.கு.சத்தியமூர்த்தி,  பி.பாலன் உள்ளிட்ட நிர்வாகிக ளுடன் பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்  குறைதீர்க் கூட்டம் நடைபெற்ற அரங்கின் முன்பாக கோரிக்கை களை வலியுறுத்திய அட்டை களை ஏந்தி உள்ளாட்சி ஊழியர் கள் முற்றுகையிட்டு நின்றனர். இதன் பிறகு சங்க நிர்வாகி கள் மாவட்ட ஆட்சியர் பழனிச் சாமியைச் சந்தித்து கோரிக்கை மனு பட்டியலை வழங்கிப் பேசி னர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண் ணிகிருஷ்ணன், ரங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக் கைகளை வெற்றி பெற தொடர் போராட்டத்திற்கு தொழிலாளர் கள் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.